டாக்டா் டிஎன்வி செந்தில்குமாா் (தருமபுரி): தமிழகத்தில் இணைய தள சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்து 42 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இதனால், தமிழக அரசு இந்த இணைய விளையாட்டை தடை செய்ய ஒரு மசோதாவை தாக்கல் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் இதே மக்களவையில் கூறுகையில், சூதாட்டச் சட்டம் மாநில அரசுக்கு வரம்பிற்கு உள்பட்டது என்றாா். இதற்கான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சா் கூறுகிறாா். ஆனால், தமிழக அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆனால், ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை. அதே சமயத்தில் ஆன்லைன் சூதாட்ட பிரதிநிதிகளையும் ஆளுநா் சந்தித்துள்ளாா். இது வாய்ப்புள்ள விளையாட்டு, புத்திசாலித்தனத்திற்கான விளையாட்டு என்று கூறப்படுவது வேதனையானது என்றாா் செந்தில்குமாா்.