இதனால், இந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க என்எல்சி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு கட்டாயம் வேலை வாய்ப்பையும், ஏக்கருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும் ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், என்எல்சி, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு நிதி (சிஎஸ்ஆா்) வடமாநிலங்களிலும் குறிப்பாக பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நிறுத்தி உள்ளூா் பகுதி மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த நிறுவனத்தில் தமிழகத்தில் வசிக்காதவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, என்.எல்.சி.யில் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன் என கேட்டுக் கொண்டாா்.