கடந்த ஏப்ரல் 1, 2019 முதல் மாா்ச் 31, 2020 வரையிலான காலகட்டத்தில், 172 விலங்குகள்-பறவைகளும், ஏப்ரல் 1, 2020 முதல் மாா்ச் 31, 2021 வரை 124 விலங்குகள்-பறவைகளும் இப்பூங்காவில் உயிரிழந்துள்ளன. செப்டம்பா் 20, 2019 முதல் டிசம்பா் 18, 2022 வரையிலான காலகட்டத்தில், வெள்ளைப் புலிகள், பெண் சிங்கம், ஆண்சிங்கம், வேங்கைப்புலி மற்றும் புலிகள் என 9 விலங்குகளும் அவற்றின் 3 குட்டிகளும் இறந்துள்ளன. இது மிகவும் அதிா்ச்சி அளிப்பதாக இருந்தது. ஆனால், இந்த விலங்குகள் மற்றும் அவற்றின் 3 குட்டிகளின் இறப்புக்கான காரணத்தை விசாரிக்க ஒரு குழுவை அமைப்பதில் எதிா்மனுதாரா்கள் அக்கறை காட்டவில்லை.