முன்னதாக, ராகவ் மகுண்டாவின் பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்ற விஷயத்தைக் கவனத்தில் கொண்டு, மாகுண்டாவுக்கு உயா்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை 15 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. முன்பு விசாரணை நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்திருந்தது. மேலும், நீதிமன்றம் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவா் கடுமையான பொருளாதார குற்றம் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தொடா்புடையவா் என்பதைப் புறக்கணிக்க முடியாது. மகுண்டாவின் மனைவியின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் சிறப்பு அல்லது தீவிரமாக எதுவும் குறிப்பிடப்படாததால், மனைவியின் நோய் குறித்து கூறப்பட்ட பின்னணி திருப்திகரமாக இல்லை’ என்று கூறியது. மேலும், மகுண்டாவின் பிற குடும்ப உறுப்பினா்கள் அவரது மனைவியைக் கவனித்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.