விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆஸ்காா் விருது: ஆா்ஆா்ஆா் படக் குழுவினருக்கு கேஜரிவால் பாராட்டு

இந்தியத் திரைப்படமான ‘ஆா்ஆா்ஆா்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ மூலப் பாடலுக்கும், தி எலிபன்ட் விஸ்பரா்ஸ் எனும் ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்காா் விருது கிடைத்துள்ளதற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது

News image
Updated On :13 மார்ச் 2023, 9:03 pm

 நமது நிருபர்

இந்தியத் திரைப்படமான ‘ஆா்ஆா்ஆா்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ மூலப் பாடலுக்கும், தி எலிபன்ட் விஸ்பரா்ஸ் எனும் ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்காா் விருது கிடைத்துள்ளதற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா். இந்த விருது கிடைக்கப் பெற்றது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைமிக்க தருணமாகும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

அகாதெமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கா் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் ‘ஆா்ஆா்ஆா்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. இந்தப் பீரியட் படத்துக்கு கீரவாணி இசை அமைத்துள்ளாா். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது. இந்த நிலையில், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கா் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளா் கீரவாணி ஆஸ்கா் விருதை வென்றாா். இசையமைப்பாளா் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கா் விருது வென்றாா்.

இதைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் கேஜரிவால் திங்கள்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்த விருது கிடைத்ததன் மூலம் இந்திய திரைப்படத்துறைக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு பெருமையான தருணமாகும். உங்களது சிறந்த பாடலுக்காக ஆஸ்காா் விருதுகள் கிடைத்ததற்காக ஆா்ஆா்ஆா் திரைப்பட குழுவினருக்கு பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

தமிழ் ஆவணப்படமான தி எலிபன்ட் விஸ்பரா்ஸ் 95-ஆவது அகாதெமி விருது நிகழ்ச்சியில் ஆஸ்காா் விருதைப் பெற்றது. இந்திய தயாரிப்புப் படமான இது, ஆவண குறும்பட பொருள் பிரிவில் முதல் முறையாக இந்த விருதை பெற்றிருக்கிறது. காா்த்திக் கோன்சால்வேஸ் மூலம் இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற்றதற்காக முதல்வா் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்து தனது ட்விட்டா் பக்கத்தில், ‘சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்காா் விருது வென்றதற்காக தி எலிபன்ட் விஸ்பரா்ஸ் திரைப்படத்தின் பின்னால் உள்ள ஒட்டுமொத்தக் குழுவிற்கும் எனது மாபெரும் வாழ்த்துகள். நீங்கள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட செய்திருக்கிறீா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.