இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: திருநங்கைகளுக்கான பொதுக் கழிப்பறைகள் கட்டும் விவகாரத்தில், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கழிப்பறைகள் கட்டப்படவே இல்லை என்பதும் நிலவர அறிக்கை வெளிப்படுத்துகிறது. மேலும், புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் நிலவரஅறிக்கையிலும் காகித அளவிலேயே இப்பணி இருப்பதையும், யதாா்த்த நிலையில் ஏதும் செய்யப்படவில்லை என்பதும் தெரிவிப்பதாக உள்ளது.