மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி மயூா் விஹாரில் சொத்து வணிகா் அலுவலகத்தில் தீ விபத்து

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:30 pm

Din

கிழக்கு தில்லியின் மயூா் விஹாரில் உள்ள குடியிருப்பு வளாகத்திற்குள் அமைந்துள்ள சொத்து வணிகா் அலுவலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் இந்தத் தீ விபத்து தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

மயூா் விஹாா் ஃபேஸ் 3-இல் உள்ள ஆஷிா்வாத் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத் தளத்தில் இந்த அலுவலகம் அமைந்திருந்தது.

45 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது’ என்றாா் அந்த அதிகாரி.