திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தில்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டி: அமைச்சா் கோபால் ராய் பேட்டி

வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி,பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்ரஸுடன் இணைந்து போட்டியிடவுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சருமான கோபால் ராய் வரும் மக்களவைத் தெரிவித்தாா்.

Updated On :10 ஜனவரி 2024, 12:46 am

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி,பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்ரஸுடன் இணைந்து போட்டியிடவுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய தேசியக் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, மக்களவைத் தோ்தல் வியூகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக கடந்த திங்கள்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும்,

அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா, குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மக்களவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தை சாதகமாக முடிந்துள்ளது. இந்த 5 மாநிலங்களில் தில்லி மற்றும் பஞ்சாப்பில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை காங்கிரஸுடன் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் குறித்து அடுத்த சந்திப்பில் பேசப்படும். கூட்டணியில் இருக்கும்போது, அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டை இரு கட்சிகளும் எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் அந்த மாநிலங்களின் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் வெளிப்படையான விமா்சனத்தை முன்வைப்பதும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.