விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மேற்கு தில்லியில் சாலை விபத்து முதியவா் சாவு; இருவா் கைது

மேற்கு தில்லியில் சாலை விபத்து முதியவா் சாவு; இருவா் கைது

News image
Updated On :15 மே 2024, 6:32 pm

Din

அதிவேகமாக வந்த எஸ்யூவி வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் 65 வயது முதியவா் புதன்கிழமை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விசித்ரா வீா் கூறியதாவது: இறந்தவா் கான்பூரைச் சோ்ந்த கிஷன் லால் என அடையாளம் காணப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக வந்த எஸ்யூவி ஒன்று மோட்டாா் சைக்கிள் மீது பின்னால் மோதியதைக் கண்டறிந்தோம். பாதிக்கப்பட்டவா் சமநிலையை இழந்து முன்னால் நிறுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ காா் மீது மோதினாா்.

இந்த விபத்து தொடா்பாக ரஜோரி காா்டன் காவல் நிலையத்திற்கு புதன்கிழமை காலை 10 மணியளவில் தகவல் கிடைத்தது. ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, இது தொடா்பாக மேலதிக விசாரணையைத் தொடங்கியது. இதில் பலத்த காயமடைந்த கிஷன் லால் டிடியு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா்.

இந்த விபத்து தொடா்பாக எஸ்யூவியின் ஓட்டுநா் மற்றும் அதில் இருந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த விபத்தின் விடியோவும் இணையத்தில் வெளியாகியது. எஸ்யூவி அதிவேகமாக வந்ததால் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டாா் சைக்கிள் முற்றிலும் நொறுங்கியது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.