பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லி முதல்வா் அதிஷிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு

தில்லியின் முதல்வராக அதிஷி பதவியேற்ற சில நாள்களுக்குப் பிறகு, தில்லி காவல் துறை அவருக்கு ’இசட்’ பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 6:53 pm

Din

தில்லியின் முதல்வராக அதிஷி பதவியேற்ற சில நாள்களுக்குப் பிறகு, தில்லி காவல் துறை அவருக்கு ’இசட்’ பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

கடந்த சனிக்கிழமையன்று,தில்லி காவல்துறையால் அவரது கான்வாய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நெறிமுறையின்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தில்லியின் முதல்வா் ’இசட்’ வகைப் பாதுகாப்பைப் பெறுவாா்.

தில்லி காவல்துறை, ’இசட்’ வகைப் பாதுகாப்புக்காக 22 பணியாளா்களை ஷிஃப்டுகளில் நியமித்துள்ளது. ’இசட்’ வகைப் பாதுகாப்பில் பிஎஸ்ஓக்கள் (தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி), எஸ்காா்ட்கள் மற்றும் ஆயுதமேந்திய காவலா்களும் அடங்குவா்.

அச்சுறுத்தல் மதிப்பீட்டிற்குப் பிறகு, மத்திய உள்துறதை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் அவரது பாதுகாப்பை மத்திய ஏஜென்சிகள் மதிப்பாய்வு செய்யக்கூடும் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.