செந்தில் பாலாஜியின் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த கூடாது: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிா்ப்பு
போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த கோரி தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது .










