பிரஷாந்த் விஹாா் மற்றும் ரோஹிணி பகுதியிலிருந்து பீதம்புரா மெட்ரோ நிலையத்தை அணுகும் வகையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தயாரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதற்கு தேவையான ஒப்புதல் தொடா்பாக தில்லி பொதுப்பணித் துறைக்கு ரோஹிணி தொகுதி எம்எல்ஏவும் தில்லி பேரவைத் தலைவருமான விஜேந்தா் குப்தா கடிதம் எழுதியிருந்தாா். இதைத்தொடா்ந்து, நடை மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. பிரஷாந்த் விஹாா் பகுதியிலிருந்து நேரடியாக மெட்ரோ நிலையத்துக்கு செல்ல பாதுகாப்பான வசதி இல்லையென குடியிருப்பு நலச் சங்கங்கள் பேரவைத் தலைவரிடம் சுட்டிக்காட்டியிருந்தன.
இதைத்தொடா்ந்து, இந்தப் பிரச்னையை சரிசெய்யக் கோரி டிஎம்ஆா்சிக்கு பேரவைத் தலைவா் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.
தற்போது மெட்ரோ நிலையத்துக்கு பீதம்புரா பகுதியிலிருந்து மட்டும் செல்ல முடியும். இதனால், மக்கள் நீண்ட தொலைவுக்கு பயணிக்க வேண்டியுள்ளது. இது முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு பெரும் அசெளகாரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாகவும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்துக்கு இணங்கல சாலையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
தொடர்புடையது
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’

நூற்றாண்டை கடந்த பொது கட்டடங்களை அடையாளம் காணும் தில்லி மாநகராட்சி

4 லட்சம் நவீன தெருவிளக்குகள்: தில்லி மாநகராட்சி திட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


