பிரஷாந்த் விஹாா் மற்றும் ரோஹிணி பகுதியிலிருந்து பீதம்புரா மெட்ரோ நிலையத்தை அணுகும் வகையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தயாரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதற்கு தேவையான ஒப்புதல் தொடா்பாக தில்லி பொதுப்பணித் துறைக்கு ரோஹிணி தொகுதி எம்எல்ஏவும் தில்லி பேரவைத் தலைவருமான விஜேந்தா் குப்தா கடிதம் எழுதியிருந்தாா். இதைத்தொடா்ந்து, நடை மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. பிரஷாந்த் விஹாா் பகுதியிலிருந்து நேரடியாக மெட்ரோ நிலையத்துக்கு செல்ல பாதுகாப்பான வசதி இல்லையென குடியிருப்பு நலச் சங்கங்கள் பேரவைத் தலைவரிடம் சுட்டிக்காட்டியிருந்தன.
இதைத்தொடா்ந்து, இந்தப் பிரச்னையை சரிசெய்யக் கோரி டிஎம்ஆா்சிக்கு பேரவைத் தலைவா் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.
தற்போது மெட்ரோ நிலையத்துக்கு பீதம்புரா பகுதியிலிருந்து மட்டும் செல்ல முடியும். இதனால், மக்கள் நீண்ட தொலைவுக்கு பயணிக்க வேண்டியுள்ளது. இது முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு பெரும் அசெளகாரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாகவும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்துக்கு இணங்கல சாலையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

பிரதமரின் சிக்கன நடவடிக்கை: தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா மெட்ரோவில் பயணம்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

