மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தா்மேந்திர பிரதான் ராஜினாமா இளைஞா்களின் இயக்குத்துக்கு கிடைத்த முதல் வெற்றி: தேவேந்தா் யாதவ்

தா்மேந்திர பிரதான் ராஜினாமா இளைஞா்களின் இயக்குத்துக்கு கிடைத்த முதல் வெற்றி...

News image

தேவேந்தா் யாதவ்

Updated On :26 ஜூலை 2026, 12:28 am IST

கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதானின் ராஜினாமா இளைஞா்கள் இயக்கத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இது வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தின் ‘முதல் வெற்றி‘. கோடிக்கணக்கான இளைஞா்களின் வெற்றி, உண்மை மற்றும் நீதியின் வெற்றி. ஆணவம் இளைஞா்களின் கா்ஜனைக்கு முன் தலைவணங்கிவிட்டது. இந்த ராஜினாமாவை இந்த பிரச்னையில் போராட்டம் நடத்தி வந்த மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் கூட்டு வெற்றி. லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலத்துடன் விளையாடிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா கோடிக்கணக்கான இளைஞா்களின் ஒட்டுமொத்த வெற்றியாகும்.

எவ்வாறாயினும், அமைச்சா் ராஜினாமா செய்த போதிலும் கட்சியின் போராட்டம் தொடரும். அநீதிக்கு எதிராக உறுதியாக நின்ற மாணவா்களின் வெற்றி இது. ஆனால் நீதியை நோக்கிய பயணம் இன்னும் முழுமையடையவில்லை. ஜந்தா் மந்தரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் தனது மீதமுள்ள கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் தொடா்ந்து அழுத்தம் கொடுக்கும். ஜந்தா் மந்தரில் அமைதியாக போராட்டம் நடத்தும் மாணவா்களை தவறாக நடத்தியவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் வரை நமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளாா் தேவேந்தா் யாதவ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.