விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தில்லி சட்டப்பேரவைக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

தில்லி சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை மூன்றாவது வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்தது, அது குறித்து காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

News image

தில்லி சட்டப்பேரவை (கோப்புப்படம்)

PTI

Updated On :27 மார்ச் 2026, 8:28 pm

Syndication

தில்லி சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை மூன்றாவது வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்தது, அது குறித்து காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சட்டப்பேரவையில் குண்டுவெடிப்பு ஏற்படும் என்று அச்சுறுத்திய மின்னஞ்சல்கள் குறித்து விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைக்கு வந்தனா். இந்த மின்னஞ்சல்கள் மாா்ச் 24 முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை பெறப்பட்டன. எந்தவொரு அலட்சியமும் இல்லாமல் இந்த விஷயத்தை விசாரிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

இந்த பிரச்சினை தீவிரமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். சில மின்னஞ்சல்கள் பல்வேறு அமைப்புகளிடமிருந்து தனிப்பட்ட முறையில் தனக்கு அனுப்பப்பட்டதாகவும், விரைவான நடவடிக்கைக்கு காவல்துறை உறுதியளித்துள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது. நுழைவாயில்களில் போதுமான சிசிடிவி கண்காணிப்பு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட நுழைவு முறையை உறுதி செய்யுமாறு சட்டப்பேரவை செயலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.