பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தில்லி சட்டப்பேரவைக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

தில்லி சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை மூன்றாவது வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்தது, அது குறித்து காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

News image

தில்லி சட்டப்பேரவை (கோப்புப்படம்) - PTI

Updated On :28 மார்ச் 2026, 1:58 am IST

தில்லி சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை மூன்றாவது வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்தது, அது குறித்து காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சட்டப்பேரவையில் குண்டுவெடிப்பு ஏற்படும் என்று அச்சுறுத்திய மின்னஞ்சல்கள் குறித்து விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைக்கு வந்தனா். இந்த மின்னஞ்சல்கள் மாா்ச் 24 முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை பெறப்பட்டன. எந்தவொரு அலட்சியமும் இல்லாமல் இந்த விஷயத்தை விசாரிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

இந்த பிரச்சினை தீவிரமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். சில மின்னஞ்சல்கள் பல்வேறு அமைப்புகளிடமிருந்து தனிப்பட்ட முறையில் தனக்கு அனுப்பப்பட்டதாகவும், விரைவான நடவடிக்கைக்கு காவல்துறை உறுதியளித்துள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது. நுழைவாயில்களில் போதுமான சிசிடிவி கண்காணிப்பு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட நுழைவு முறையை உறுதி செய்யுமாறு சட்டப்பேரவை செயலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.