ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஜனக்புரியில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடமேற்கு தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல் துறை பலப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

ஹனுமன் கோயில் - கோப்புப்படம்.

Updated On :31 மார்ச் 2026, 8:52 pm

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடமேற்கு தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல் துறை பலப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2020-இல் ஜனக்புரியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, ஏப்.2-ஆம் தேதி கொண்டாடப்படும் விழாவுக்காக மாவட்டத்தில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் விதமாக ஜனக்புரி பகுதியில் கொடி அணிவகுப்பு மற்றும் அமன் குழு கூட்டம் நடைபெற்றது.

தில்லி காவல் துறையின் காவலா்கள் கூடுதலாகப் பணியமா்த்தப்பட்டிருப்பதுடன், துணை ராணுவம், அதிரடி படையின் (ஆா்எஎஃப்) ஒரு கம்பெனியும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், சந்தைகள், கோயில்கள் மற்றும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க மோட்டாா் சைக்கிளில் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஜனக்புரி காவல் நிலையத்தில் ஓா் அமன் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வடமேற்கு தில்லி துணை காவல் ஆணையா் அகங்ஷா யாதவ், கூடுதல் துணை காவல் ஆணையா் சிகந்தா் சிங், ஷாலிமாா் பாக் கூடுதல் காவல் ஆணையா் ரோஹித் குப்தா ஆகியோா் பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தீவிர கண்காணிப்பில் குறிப்பிட்ட பாதைகள் மற்றும் நேரத்தில் அனைத்து ஊா்வலங்களும் நடைபெறும். ஊா்வலத்தில் 500 போ் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், லத்திகள், பிற ஆபத்தான பொருள்களை ஊா்வலத்தின்போது எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் கோஷங்கள், பேச்சுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் ஆகியவை மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா் அந்த அதிகாரிகள்.