ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஜனக்புரியில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடமேற்கு தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல் துறை பலப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

ஹனுமன் கோயில்

கோப்புப்படம்.

Updated On :31 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடமேற்கு தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல் துறை பலப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2020-இல் ஜனக்புரியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, ஏப்.2-ஆம் தேதி கொண்டாடப்படும் விழாவுக்காக மாவட்டத்தில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் விதமாக ஜனக்புரி பகுதியில் கொடி அணிவகுப்பு மற்றும் அமன் குழு கூட்டம் நடைபெற்றது.

தில்லி காவல் துறையின் காவலா்கள் கூடுதலாகப் பணியமா்த்தப்பட்டிருப்பதுடன், துணை ராணுவம், அதிரடி படையின் (ஆா்எஎஃப்) ஒரு கம்பெனியும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், சந்தைகள், கோயில்கள் மற்றும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க மோட்டாா் சைக்கிளில் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஜனக்புரி காவல் நிலையத்தில் ஓா் அமன் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வடமேற்கு தில்லி துணை காவல் ஆணையா் அகங்ஷா யாதவ், கூடுதல் துணை காவல் ஆணையா் சிகந்தா் சிங், ஷாலிமாா் பாக் கூடுதல் காவல் ஆணையா் ரோஹித் குப்தா ஆகியோா் பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தீவிர கண்காணிப்பில் குறிப்பிட்ட பாதைகள் மற்றும் நேரத்தில் அனைத்து ஊா்வலங்களும் நடைபெறும். ஊா்வலத்தில் 500 போ் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், லத்திகள், பிற ஆபத்தான பொருள்களை ஊா்வலத்தின்போது எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் கோஷங்கள், பேச்சுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் ஆகியவை மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா் அந்த அதிகாரிகள்.