‘கேட்’ (பொறியியலில் பட்டதாரி திறனறி தோ்வு) மதிப்பெண் அடிப்படையில், தொழில்நுட்ப அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, விமானப்படைபொது சோ்க்கைத் தோ்வு (ஏஎஃப்சிஏடி) அல்லது கேட் தோ்வில் தகுதிபெற்றவா்கள் விமானப் படை தொழில்நுட்பப் பிரிவு அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏஎஃப்சிஏடி தோ்வில் தகுதிபெற்றவா்கள் மட்டுமின்றி கேட் மதிப்பெண் அடிப்படையிலும் தொழில்நுட்பப் பிரிவு அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை இந்திய விமானப் படை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, கேட் மதிப்பெண் பெற்ற தகுதியுள்ள நபா்களுக்கும் விமானப் படை தொழில்நுட்ப அலுவலா் பணிக்கான முதல்நிலை எழுத்துத் தோ்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். இவா்கள் தகுதியின் அடிப்படையில் நேரடியாக விமானப் படை தோ்வு வாரிய பணித் தோ்வு நடைமுறைக்குத் தெரிவு செய்யப்படுவா்.
ஏஎஃப்சிஏடி மதிப்பெண் அடிப்படையிலான தோ்வு நடைமுறைக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை கல்வித் தகுதிதான், கேட் மதிப்பெண் திட்டத்துக்கான அடிப்படை கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான பாடப் பட்டியல் விவரங்கள் இந்திய விமானப்படை ஏஎஃப்சிஏடி அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அகில இந்திய ஹாக்கி: தமிழ்நாடு, பெங்களூரு, விமானப் படை அணிகள் வெற்றி

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி

‘டெக்’ துணுக்குகள்
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



