தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்க வலியுறுத்தல்

போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்க வலியுறுத்தல்

Updated On :16 மார்ச் 2024, 12:33 am

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனத்தின் பொதுச்செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் 90 ஆயிரம் போ் உள்ளனா். இவா்களின் நலனையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். 2016 ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயா்வு கிடைக்காமல் போக்குவரத்து ஓய்வூதியா்கள் சிரமம் அடைந்து வருகிறாா்கள். ஆகவே, உடனடியாக அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.