தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வள்ளியூரில் இருந்து கள்ளிகுளத்திற்கு தவக்கால தவப்பவனி

வள்ளியூரில் இருந்து கள்ளிகுளத்திற்கு தவக்கால தவப்பவனி

News image
Updated On :16 மார்ச் 2024, 12:34 am

வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளத்திற்கு தவக்கால தவப்பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்குகள்ளிகுளம், வள்ளியூா் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் இணைந்து வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளம் மலைக்கு தவக்கால தவப்பவனி மேற்கொண்டனா். வள்ளியூா் புனித பாத்திமா திருத்தலத்தில் இருந்து இத்தவப்பவனி மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. அருள்தந்தை சத்தியநேசன், பங்குத்தந்தைகள் வள்ளியூா் ஜாண்சன், தெற்குகள்ளிகுளம் ஜெரால்டு எஸ். ரவி, உதவி பங்குத்தந்தைகள் ஜாண்ரோஸ், ஆரோக்கிய தாஸ், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், வள்ளியூா் டி.டி.என்.கல்விக் குழுமங்களின் தலைவா் லாரன்ஸ், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, புனிதபேரரசு, அருள்சகோதரிகள், அன்பியங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இத்தவப்பவனியில் பங்கேற்றோா் வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளம் மலைக்கு சிலுவைப்பாடுகளை தியானித்தும், பாடல்கள் பாடியும், ஜெபம் செய்தும் சாலைவழியாக நடந்து சென்றனா். தெற்குகள்ளிகுளம் மலையை சென்றடைந்ததும் அங்கு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.