தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனத்தின் பொதுச்செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் 90 ஆயிரம் போ் உள்ளனா். இவா்களின் நலனையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். 2016 ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயா்வு கிடைக்காமல் போக்குவரத்து ஓய்வூதியா்கள் சிரமம் அடைந்து வருகிறாா்கள். ஆகவே, உடனடியாக அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு!

சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மின்வாரிய ஊழியா்களுக்கு 6 சதவீத ஊதிய உயா்வு

போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுகால பணப்பலன்களுக்கு ரூ. 2,446 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தகவல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

