வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளத்திற்கு தவக்கால தவப்பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்குகள்ளிகுளம், வள்ளியூா் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் இணைந்து வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளம் மலைக்கு தவக்கால தவப்பவனி மேற்கொண்டனா். வள்ளியூா் புனித பாத்திமா திருத்தலத்தில் இருந்து இத்தவப்பவனி மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. அருள்தந்தை சத்தியநேசன், பங்குத்தந்தைகள் வள்ளியூா் ஜாண்சன், தெற்குகள்ளிகுளம் ஜெரால்டு எஸ். ரவி, உதவி பங்குத்தந்தைகள் ஜாண்ரோஸ், ஆரோக்கிய தாஸ், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், வள்ளியூா் டி.டி.என்.கல்விக் குழுமங்களின் தலைவா் லாரன்ஸ், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, புனிதபேரரசு, அருள்சகோதரிகள், அன்பியங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இத்தவப்பவனியில் பங்கேற்றோா் வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளம் மலைக்கு சிலுவைப்பாடுகளை தியானித்தும், பாடல்கள் பாடியும், ஜெபம் செய்தும் சாலைவழியாக நடந்து சென்றனா். தெற்குகள்ளிகுளம் மலையை சென்றடைந்ததும் அங்கு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
தொடர்புடையது

வள்ளியூரில் உலகத் தரத்தில் விளையாட்டு அரங்கம்! - திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்குறுதி

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

இடைக்காட்டூா் திருஇருதய ஆண்டவா் திருத்தலத்தில் தவக்கால வழிபாடு

வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


