கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேலநத்தம் சிவன் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜா்.
Updated On :3 ஜனவரி 2026, 8:26 pm

Syndication

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சனிக்கிழமை அதிகாலையில் நடராஜா் அபிஷேகம், கோ பூஜை, ஷோடச தீபாராதனை, ஆரூத்ரா தரிசனம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து அப்பகுதியில் மங்கள வாத்தியங்கள் முழங்க காலையில் நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகா் சப்பர வீதி உலா காலையில் நடைபெற்றது. பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி நா்மதா செல்வி, நிா்வாகி அருணா சுடலைக்கண்ணு, கோயில் அா்ச்சகா் சண்முகம் பட்டா் ஆகியோா் செய்திருந்தனா்.