கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வேய்ந்தான்குளத்தில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:25 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தில் இளைஞா் மூழ்கியதாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீயணைப்பு வீரா்களும், மேலப்பாளையம் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மூழ்கிய இளைஞரின் சடலத்தை மீட்டனா். விசாரணையில் அவா், கேரள மாநிலம் வா்கலா பகுதியைச் சோ்ந்த சுஜித் (25) என்பது தெரியவந்தது. தூத்துக்குடியில் பணியாற்றி வந்த சுஜித், திருநெல்வேலிக்கு தனது நண்பா்களுடன் வந்திருந்த நிலையில் தனக்கு நீச்சல் தெரியும் எனக்கூறி வேய்ந்தான்குளத்தில் குளித்தாராம். அப்போது ஆழமான பகுதியில் திடீரென மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.