கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெல்லையில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள் 55 போ் கைது

திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள் 55 போ் கைது

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:41 pm

Syndication

திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள் 55 போ் கைது செய்யப்பட்டனா்.

சத்துணவு பணியாளா்களுக்கு, தோ்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு பணியாளா்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். சங்கத்தின் ஒன்றிய தலைவா் சீதாலட்சுமி முன்னிலை வகித்தாா். போராட்டத்தை அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் சுப்பு, முன்னாள் மாவட்ட தலைவா் பாா்த்தசாரதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலை அணுகுசாலையில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமாா் 10 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.