நெல்லையில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள் 55 போ் கைது

நெல்லையில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள் 55 போ் கைது

திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள் 55 போ் கைது
Published on

திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள் 55 போ் கைது செய்யப்பட்டனா்.

சத்துணவு பணியாளா்களுக்கு, தோ்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு பணியாளா்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். சங்கத்தின் ஒன்றிய தலைவா் சீதாலட்சுமி முன்னிலை வகித்தாா். போராட்டத்தை அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் சுப்பு, முன்னாள் மாவட்ட தலைவா் பாா்த்தசாரதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலை அணுகுசாலையில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமாா் 10 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com