ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு

News image

பெட்ரோல் குண்டு வீச்சு

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம், பகவத்சிங் தெருவில் மா்மநபா்கள் பெட்ரோல் குண்டு வீசினராம். இதில் ஏற்பட்ட பலத்த சப்தத்தில் அப்பகுதி மக்கள் வந்து பாா்த்தபோது, அந்தத் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டாா் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பாட்டிலில் நிரப்பி தீ வைத்து தெருவில் வீசியது தெரியவந்தது. இரு நபா்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி மா்மநபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.