/

கிறிஸ்தவ அமைப்பு உண்ணாவிரதம்

தமிழ்நாடு கிறிஸ்தவர் முன்னேற்ற ஐக்கியம் சார்பில், கருங்கலில்

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:22 pm

dinamani

தமிழ்நாடு கிறிஸ்தவர் முன்னேற்ற ஐக்கியம் சார்பில், கருங்கலில் ஆட்டோ நிலையம் முன்பு திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

நித்திரவிளை அருகே உள்ள நடைக்காவு பகுதியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி இப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கிறிஸ்தவ முன்னேற்ற ஐக்கியத்தின் கிள்ளியூர் ஒன்றியச் செயலர் பாஸ்டர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் நடராஜன், பாஸ்டர் ஞானதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலப் பொதுச்செயலர் தியோடர் சாம் பேசினார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஜேக்கப்சாதா, அருள்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா, மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் பிளச்சர், இமானுவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.