அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வெட்டுவெந்நி சாலையில் நெரிசல்: நடைபாதை அமைக்க வலியுறுத்தல்

மார்த்தாண்டம் மேம்பாலப் பணி காரணமாக வெட்டுவெந்நி பகுதியில் ஏற்பட்டுள்ள நெரிசலை தவிர்க்கும் வகையில், சாலையையொட்டி

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:12 pm

DIN

மார்த்தாண்டம் மேம்பாலப் பணி காரணமாக வெட்டுவெந்நி பகுதியில் ஏற்பட்டுள்ள நெரிசலை தவிர்க்கும் வகையில், சாலையையொட்டி நடைபாதை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெட்டுவெந்நியில் ஆற்றுப் பாலம் அருகிலிருந்து பம்மம் பகுதி வரை 2.4 கி.மீ. தொலைவுக்கு மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வெட்டுவெந்நியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு,  அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
குழித்துறையிலிருந்து வெட்டுவெந்நி - மார்த்தாண்டம் பகுதிக்கு இருசக்கர வாகனங்களை மட்டும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.  இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் குறுகலான பாதையாக உள்ளதால்,  இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதை வழியாக பாதசாரிகள் நடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, வெட்டுவெந்நியில் சாலையோரமாக பாதசாரிகள் நடந்து செல்வதற்காக தனியாக பாதை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அண்மையில் தொடக்கியது. ஆனால் இப் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மேம்பாலப் பணிகள் நிறைவடையும் வரை இப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும், பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, வெட்டுவெந்நியில் பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக சாலையோரமாக தனிப் பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.