இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நித்திரவிளை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்ல முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:14 pm

DIN

நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்ல முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், தனித்துணை வட்டாட்சியர் சந்திரசேகர், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் உள்ளிட்டோர் நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறை பகுதியில் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக அதிக பாரத்துடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அதை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பிவிட்டாராம். தொடர்ந்து அதிலிருந்த பைகளை சோதனையிட்டதில், 400 கிலோ  ரேஷன் அரிசி பதுக்கிவைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிசல் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.