கொல்லங்கோடு அருகே முன்விரோதம் காரணமாக 3 பெண்கள், 2 குழந்தைகளைத் தாக்கியதாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கொல்லங்கோடு அருகேயுள்ள சூசைபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் (42). மீன்பிடி தொழிலாளி. இவரது மகளை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து கேலி செய்து வந்ததாராம். இதுகுறித்து வின்சென்ட் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து அப்பகுதியைச் சேர்ந்த மோயிஸ் மகன் ரோஷன் (27) என்பவரை அண்மையில் கைது செய்தனர்.
இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், வின்சென்டின் உறவினர்கள் விஜயராணி, லூர்துமேரி, புஸ்பராணி மற்றும் 2 குழந்தைகளுடன் அவரது வீட்டினருகே திங்கள்கிழமை நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மோயிஸ், பிரான்சிஸ் ஆகியோர் அவர்களிடம் தகராறு செய்து, தாக்கினராம். இதில், காயமடைந்த இரு குழந்தைகள் உள்பட 5 பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான மோயிஸ், பிரான்சிஸ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சில பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் ரத்து: டிடிஏ தகவல்

சமூக ஊடங்களில் அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சா்மா

நூற்றாண்டுகால ஆா்எஸ்எஸ் பயணம் குறித்த திரைப்படம்: முதல்வா் ரேகா குப்தா பாா்த்தாா்

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் : தில்லியில் கிரிஷ் சோடங்கா் பேட்டி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
