தொல்காப்பியர் பிறந்த நாள் விழா: சிலைக்கு தமிழறிஞர்கள் மரியாதை
தொல்காப்பியரின் 2729ஆவது பிறந்த நாளையொட்டி மார்த்தாண்டம் அருகே காப்பிக்காட்டில் அமைந்துள்ள அவரது சிலைக்கு


தொல்காப்பியரின் 2729ஆவது பிறந்த நாளையொட்டி மார்த்தாண்டம் அருகே காப்பிக்காட்டில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழறிஞர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர். இவர் கன்னியாகுமரி மாவட்டம், காப்பிக்காட்டில் பிறந்ததாக தமிழறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் இப்பகுதியில் தொல்காப்பியருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
இந்நிலையில் தொல்காப்பியர் பிறந்ததாக கருதப்படும் சித்திரை மாதம் முழுமதி நாளான ஞாயிற்றுக்கிழமை காப்பிக்காட்டில் உள்ள அவரது சிலைக்கு தமிழறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை அமைப்புச் செயலர் புலவர் த. சுந்தரராசன் தலைமை வகித்தார். குமரி முத்தமிழ் மன்றச் செயலர் செ. சஜீவ் வரவேற்றார். இதில் எழுத்தாளர் பொன்னீலன், குமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வாளரும், ஆய்வுக் களஞ்சியம் நூல் ஆசிரியருமான எஸ். பத்மநாபன், அதங்கோட்டாசான் அறக்கட்டளை தலைவர் புலவர் கோ. கோவிந்தநாதன், குமரி மாவட்ட பெற்றோர் -ஆசிரியர் சங்கத் தலைவர் பி.பி.கே. சிந்துகுமார், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை துணை ஆணையர் மு. பாஸ்கரன், காவடியூர் சிவ. நாராயணபெருமாள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, சென்னை தொல் தமிழர் வரலாற்று அதிநுட்ப ஆய்வுமையத்தின் வே.தி. செல்லம், குமரி முத்தமிழ் மன்றத் தலைவர் பா. லாசர் ஆகியோருக்கு தொல்காப்பியர் விருதை எழுத்தாளர் பொன்னீலன் வழங்கினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...