
நித்திரவிளை அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, நித்திரவிளை அருகே
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, நித்திரவிளை அருகே தற்காலிக முகாமில் தங்கியுள்ளவர்களை கிள்ளியூர் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருவதையடுத்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மங்காடு, பணமுகம் மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிக்கு உள்பட்ட வைக்கல்லூர், ஏலூர்முக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள 300 -க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பலர் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலிங்கராஜபுரம் சுனாமி மறுவாழ்வு மையக் கட்டடத்திலும், பார்த்திபபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, மங்காடு அரசு நடுநிலைப் பள்ளி, பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை கிள்ளியூர் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பார்த்திபபுரம் உள்ளிட்ட முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு பாய் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
அப்போது, முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் விமல், ஏழுதேசம் பேரூராட்சி முன்னாள் தலைவர் மேரிபாய், கட்சியின் மாவட்டச் செயலர் டென்னிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





