கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 7:10 am IST

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர் கூட்டத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க ஏராளமானோர் வருகின்றனர். இதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அச்சன்குளம் பகுதியைச் சேர்ந்த கோலம்மாள் (50) என்பவர் திங்கள்கிழமை தனது 10 வயது மகனுடன் வந்திருந்தார். கூலித் தொழிலாளியான இவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி மகனுடன் தீக்குளிக்க முயன்றாராம். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கோலம்மாளிடம் நேசமணிநகர் போலீஸார் விசாரணை நடத்தினர். 
விசாரணையில், கோலம்மாளிடம் இருந்து அப்பகுதியைச் சேர்ந்த இயேசுதங்கம், தங்கசுஜிதா ஆகியோர் பணம் கடனாக வாங்கியிருந்தனராம். கடனை திருப்பிக் கேட்டதற்காக கோலம்மாளுக்கு மிரட்டல் விடுத்ததோடு, அவரது குடிசை வீட்டுக்கு 
தீ வைத்து சேதப்படுத்தினராம். இது தொடர்பாக கோலம்மாள் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.