நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர் கூட்டத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க ஏராளமானோர் வருகின்றனர். இதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அச்சன்குளம் பகுதியைச் சேர்ந்த கோலம்மாள் (50) என்பவர் திங்கள்கிழமை தனது 10 வயது மகனுடன் வந்திருந்தார். கூலித் தொழிலாளியான இவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி மகனுடன் தீக்குளிக்க முயன்றாராம். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கோலம்மாளிடம் நேசமணிநகர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கோலம்மாளிடம் இருந்து அப்பகுதியைச் சேர்ந்த இயேசுதங்கம், தங்கசுஜிதா ஆகியோர் பணம் கடனாக வாங்கியிருந்தனராம். கடனை திருப்பிக் கேட்டதற்காக கோலம்மாளுக்கு மிரட்டல் விடுத்ததோடு, அவரது குடிசை வீட்டுக்கு
தீ வைத்து சேதப்படுத்தினராம். இது தொடர்பாக கோலம்மாள் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









