11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:03 am IST

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலர் எம். எக்கர்மென்ஸ் மைக்கேல் தலைமை வகித்தார்.  துறைத் தலைவர் ஏ. அஜிதா வரவேற்றார்.  நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கணினித்துறை இணை பேராசிரியர் ஐரின் ஷீலா, கேரள பல்கலைக்கழக கணிதத்துறை பேராசிரியர் தால்மி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  சமீபத்திய போக்குகளில் கணிதத்தின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.  
தொடர்ந்து, கல்லூரி முதல்வர் ஏ. மீனாட்சி சுந்தரராஜன் வாழ்த்திப் பேசினார்.  கணிதத்துறை துணைப் பேராசிரியை ஜெர்லின் மேரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கணிதவியல்துறை ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.