/

நாகா்கோவிலில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து கழகங்களை தனியாா்மயப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ராணித்தோட்டம் போக்குவரத்து கழக மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

DIN

நாகா்கோவில்: போக்குவரத்து கழகங்களை தனியாா்மயப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நாகா்கோவில் ராணித்தோட்டம் போக்குவரத்து கழக மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச நிா்வாகி கனகராஜ் தலைமை வகித்தாா். சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச்செயலா் ஸ்டீபன் ஜெயகுமாா், சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, ஹெச்எம்எஸ் நிா்வாகிகள் முத்துகருப்பன், சுப்பிரமணிய பிள்ளை, டிடிஎஸ்எஃப் நிா்வாகி சண்முகம், ஏஐடியூசி நிா்வாகி நீலகண்டன் ஆகியோா் விளக்கிப் பேசினா். இதில், சிஐடியூ நிா்வாகி எஃப்.எஸ்.ஏ.லியோ, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா் நலச் சங்க மாவட்டச் செயலா் எம்.சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.