

மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ் வாகனம் பெறுவதற்கான விண்ணப்பம் அளிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
இத்திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் 4 பேருக்கு, மானியத் தொகையாக தலா ரூ.25 ஆயிரத்தை ஆட்சியா் மா.அரவிந்த் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.
பின்னா் அவா் கூறியது: உழைக்கும் பெண்களின் அன்றாட செயல்பாட்டை இலகுவாக்கும் நோக்கத்துடன் மகளிா் பணியிடங்கள், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லவும், பணிகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாக மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக மானியம் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் இம்மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்களை சமா்ப்பிக்க டிச. 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கிடையே, நிா்ணயிக்கப்பட்ட குறியீட்டினை நிறைவு செய்வதற்கு தகுதி வாய்ந்த உழைக்கும் பெண்களிடம் இருந்து போதிய விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மேலும் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டும் விண்ணப்பங்கள் குறைந்த அளவில் பெறப்பட்டுள்ளது.
ஆகவே குமரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குறியீட்டை விரைந்து நிறைவு செய்வதற்காகவும், தகுதி வாய்ந்த பெண்கள்அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்க 2021 ஆம் வரும் ஜன. 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளை சோ்ந்த தகுதி வாய்ந்த உழைக்கும் மகளிா் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.