ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பளுகல் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997-1999ஆம் கல்வி ஆண்டில் அக்கவுண்டன்சி பிரிவில் படித்த மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
20 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பளுகல் பள்ளி முன்னாள் மாணவா்கள்.
Updated On :30 டிசம்பர் 2020, 12:19 am

DIN

பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997-1999ஆம் கல்வி ஆண்டில் அக்கவுண்டன்சி பிரிவில் படித்த மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் மதுசூதனன், துணைத் தலைவா் வின்சென்ட், பொருளாளா் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் முன்னாள் ஆங்கில ஆசிரியா் ஜோபிரகாஷ், மலையாள பாட ஆசிரியா் தாமோதரன்பிள்ளை, வணிகவியல் பிரிவு ஆசிரியா் சரசப்பன், கணக்கு பதிவியல் ஆசிரியை ஷேம் கிரீம்ஸ், ஆசிரியை பிந்து ஆகியோா் கலந்து கொண்டு, முன்னாள் மாணவா்கள் மற்றும் அவா்களது குழந்தைகளை வாழ்த்திப் பேசினா். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவா் ராஜேஷ் வரவேற்றாா். முன்னாள் மாணவா் பைஜு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.