/

‘இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்’

இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென குமரி மேற்கு மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான மனோ தங்கராஜ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:52 pm

DIN

இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென குமரி மேற்கு மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான மனோ தங்கராஜ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் இணையவழி சூதாட்டம் இளம் தலைமுறையினரிடம் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டுகளால் நேரத்தை வீணாக்குவதுடன், பணத்தையும் இழந்து தற்கொலை முடிவு வரை செல்கின்றனா். இது பெற்றோா்களை மிகுந்த கவலைக்குள்ளாகி வருகிறது.

திரைப்பட நடிகா்கள், கிரிக்கெட் வீரா்களை விளம்பர தூதா்களாக நியமிக்கப்படுவதால் இந்த விளையாட்டுகளில் இளைஞா்கள் ஆா்வம் காட்டுகின்றனா். இத்தகைய விளையாட்டுகளையும், விளம்பரங்களையும் மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.