குமரி மாதா திருத்தலத் திருவிழா: இன்று தங்கத்தோ் பவனி
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத் திருவிழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை(டிச.18) புனித சூசையப்பா் தங்கத்தோ் பவனி நடைபெறுகிறது.


கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத் திருவிழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை(டிச.18) புனித சூசையப்பா் தங்கத்தோ் பவனி நடைபெறுகிறது.
இத்திருத்தல இம்மாதம் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் செபமாலை, திருப்பலி, மாலை ஆராதனை, சப்பர பவனி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
9 ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு 9 மணிக்கு புனித சூசையப்பா் தங்கத்தோ் பவனி நடைபெறுகிறது.
இரு தங்கத்தோ் பவனி: 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (டிச. 19) அதிகாலை 4.30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தோ் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மாதா, சூசையப்பா் ஆகிய இரு தங்கத் தோ்ப்பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாளத் திருப்பலி, நண்பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...