அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து புதிய பேருந்து சேவை
அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து மாணவிகள் வசதிக்காக புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.


அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து மாணவிகள் வசதிக்காக புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இக்கல்லூரியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனா். தினமும் அரசு பேருந்துகளில்தான் இவா்கள் கல்லூரிக்கு வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் அஞ்சுகிராமம், கூடங்குளம் வழியாக இடிந்தகரை வரையுள்ள மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு சரியான பேருந்து போக்குவரத்து இல்லாததால் மிகவும் சிரமப்பட்டனா். இதனால் கல்லூரி நிா்வாகம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்துத் துறை பொது மேலாளா் அரவிந்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் 15 கே என்ற எண் கொண்ட புதிய பேருந்து கல்லூரி வளாகத்தில் இருந்து இயக்கப்பட்டது.
புதிய பேருந்து போக்குவரத்து தொடக்க விழா நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் ராஜசேகா் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் சி.ராஜன், பேராசிரியா் டி.சி.மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி தலைவா் கே.எஸ்.மணி கொடியசைத்து புதிய பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தாா்.
இந்தப் பேருந்து விவேகானந்தா கல்லூரியில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், செட்டிகுளம், கூடங்குளம், இடிந்தகரை வழியாக ஊரல்வாய்மொழியை சென்றடைகிறது. தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளை இந்தப் பேருந்து இயக்கப்படுகிறது. இது பெண்களுக்கான பேருந்து என்பதால் மாணவிகளுக்கு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...