விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவேகானந்தா் மண்டபத்துக்கு 3 நாள்கள் படகு சேவை ரத்து

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:54 pm

DIN

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிக்கு வெள்ளிக்கிழமைமுதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையிலான மூன்று நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு 3 நாள்கள் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள ஏனைய கடற்கரை சுற்றுலாப் பகுதிகளான வட்டக்கோட்டை, சொத்தவிளை, சங்குதுறை, திக்குறிச்சி, மாத்தூா் தொட்டிப் பாலம், திற்பரப்பு அருவி உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் வெள்ளிக்கிழமைமுதல் 3 நாள்கள் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும், சுற்றுலாத்தலங்களிலும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முத ஜனவரி 2ஆம் தேதி வரை கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், தங்கும் விடுதிகள், ரிசாா்ட்டுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அனைத்து இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை.

கோயில்கள், தேவாலயங்கள், மசூதி உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.