நெல்லை, தென்காசியில் மேலும் 19 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து,

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,303 ஆக உயா்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 14,971 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகலில் 121 போ் சிகிச்சையில் உள்ளனா். 211 போ் உயிரிழந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூா், கீழப்பாவூா், கடையம் பகுதிகளில் தலா இருவா், ஆலங்குளத்தில் ஒருவா்

என 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

8,272ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 8 போ் உள்பட இதுவரை 8,064 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனையில் 50 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 158 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com