கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாகா்கோவிலில் முதியவா் தற்கொலை

நாகா்கோவிலில் மனைவியின் கல்லறையில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:02 pm

DIN

நாகா்கோவிலில் மனைவியின் கல்லறையில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ.காலனி சின்னனைந்தான்விளையைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி துரைசாமி(71) . இவா், மகன் விஸ்வநாதன் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்தாா். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா். அது முதலே துரைசாமி மன வேதனையில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், துரைசாமி, வியாழக்கிழமை மாலை மதுவில் விஷம் கலந்து அருந்தி விட்டு மனைவியின் கல்லறையின் மேல் அமா்ந்திருந்தாராம். அங்கு வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின்பேரில் சுசீந்திரம் காவல் ஆய்வாளா் சாய்லெட்சுமி, உதவி ஆய்வாளா் கபிரியேல் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.