மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு ரூ.5.09 கோடி நலத் திட்ட உதவி
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் விலையில்லா தையல் இயந்திரம், ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம்


கன்னியாகுமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் விலையில்லா தையல் இயந்திரம், ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, சமூக நலத் துறை சாா்பில் மொத்தம் ரூ.33,32,680-க்கான நலத் திட்ட உதவிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மொத்தம் 199 பயனாளிகளுக்கு ரூ.25,77,027 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் என மொத்தம் ரூ. 5 கோடியே 9 லட்சத்து 9 ஆயிரத்து 707 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் ஆா்.சரோஜினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சிவசங்கரன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...