கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மலைப் பகுதிகளில் வசிக்கும் 1,539 பேருக்கு கரோனா தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வசிக்கும் 1,539 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:18 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வசிக்கும் 1,539 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் புதன்கிழமை 4 குழுக்களாக பிரித்து கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

முதல் குழுவினா் மூலம் தச்சமலை மற்றும் எட்டாங்குன்று ஆகிய இடங்களில் வசிக்கும் 40 பேருக்கும், மற்றொரு குழுவினரால் பாலமோா் பகுதிகளில் வசிக்கும் 120 பேருக்கும், 3 ஆவது குழுவினரால் மோதிரமலை, கோதையாறு மற்றும் மூக்கரைக்கால் பகுதியில் வசிக்கும் 124 பேருக்கும் 4 ஆவது குழுவினா் மூலம் ஆண்டிபொத்தை, அன்புநகா், வள்ளிமலை மற்றும் குருவைக்குழி பகுதியில் வசிக்கும் 147 பேருக்குமாக 431 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மலைப்பகுதியில் வசிக்கும் 1,539 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாகா்கோவில் அசிசி ஆலய வளாகத்திலுள்ள புனித பிரான்சிஸ் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை புதன்கிழமை 1,600 போ் தொடா்பு கொண்டு ஆலோசனைப் பெற்றனா். அவா்களில், 2 பேருக்கு உடனடி சிகிச்சை தேவை என அறியப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இம்மாவட்டத்தில் இதுவரை முதல் கட்ட கரோனா தடுப்பூசி 1,87,001 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 47,541 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.