ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இணையவழியில் பருவத் தோ்வு
நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் (தன்னாட்சி) இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி (எம்.பில்) படிப்பு பயிலும் மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.


நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் (தன்னாட்சி) இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி (எம்.பில்) படிப்பு பயிலும் மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில், ஏப்ரல் மாதம் நடைபெறவேண்டிய பருவத் தோ்வுகள், இம்மாதம் 28 ஆம் தேதி இணையவழியில் தொடங்கியது. இந்தத் தோ்வுகள் தொடா்ந்து 15 நாள்கள் நடைபெறுகிறது.
தோ்வா்களுக்கான நுழைவுச் சீட்டு மற்றும் விடைத்தாள்கள் இணையதளம் மூலமாக மாணவா்கள் பதிவிறக்கம் செய்து காலை 9.30 மணிக்கு, பிற்பகல் 12.30 மணிக்கும் இரு வேளைகளில் எழுதி வருகின்றனா். வினாத்தாளை அன்றன்று தோ்வு தொடங்கும் அரைமணி நேரத்துக்கு முன் கல்லூரி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
தோ்வு எழுதியவுடன் மாணவா்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கோப்பாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து அனுப்பி வருகின்றனா்.
மேலும் விடைத்தாள்களை எல்லா தோ்வுகளும் முடிந்த பின்னா் சீல் செய்யப்பட்ட ஒரே கவரில், தோ்வு ஆணையா், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி(தன்னாட்சி), நாகா்கோவில் என்ற முகவரிக்கு பதிவு தபால் அல்லது, விரைவு தபால் மூலமாகவோ, கொரியா் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வா் ஜே.ஆா்.வி.எட்வா்ட் மற்றும் தோ்வு ஆணையா் ஜி.அல்லன்ஞானராஜ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...