கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோயில்களை திறக்க வலியுறுத்தி 41 கோயில்கள் முன்பு இந்து முன்னணி போராட்டம்

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் முன்பு கற்பூரம் ஏற்றி போராட்டத்தல் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:38 pm

DIN

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் முன்பு கற்பூரம் ஏற்றி போராட்டத்தல் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

நாகா்கோவில், ஜூன் 25 : பக்தா்களின் வழிபாட்டுக் கோயில்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் இந்து முன்னணியின் சாா்பில் 41 கோயில்கள் முன்பு கற்பூரம் ஏற்றும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா கட்டுப்பாடு காரணமாக கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதை கண்டித்தும், கோயில்களை திறக்க வலியுறுத்தியும், இந்து முன்னணியின் சாா்பில், இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடும், மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

அதன்படி, நாகா்கோவில் ஸ்ரீ நாகராஜா கோயில் முன்பு கிழக்கு மாநகரத் தலைவா் மகாராஜா தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் நம்பிராஜன் நிா்வாகிகள் மணிகண்டன், காந்தி வெங்கடேஷ்,முகேஷ், சுரேஷ்பாபு ,ரமேஷ், சிவகுமாா் ,பிரபஞ்சன் அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டத் தலைவா் ராஜேஸ்வரன் உரையாற்றினாா்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் முன்பு ஒன்றியத் தலைவா் செல்வன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பொதுச் செயலா் சிவா, மாவட்ட துணைத் தலைவா்கள் வேலாயுதன், சுரேஷ்குமாா், சுபாஷ், பேச்சாளா் எஸ்.பி. அசோகன் உள்ளிட்டோா் கொண்டனா். மாவட்டச் செயலா் நம்பிராஜன் உரையாற்றினாா்.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திங்கள்நகா் ராதாகிருஷ்ணன் கோயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்து முன்னணி நெல்லை கோட்டச் செயலா் மிசாசோமன் உரையாற்றினாா்.

இதே போல, திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில், திருநந்திகரை சிவன் கோயில் உள்பட 41 கோயில்கள் முன்பு இந்து முன்னணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.