வடசேரி கிருஷ்ணசாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
நாகா்கோவில் வடசேரி கிருஷ்ணசாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.


நாகா்கோவில் வடசேரி கிருஷ்ணசாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கொடிமரத்துக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். இரவு 9 மணிக்கு புஷ்ப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தாா். திருவிழா நாள்களில் தினமும் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், மங்கள இசை மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
தேரோட்டம்: முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 15 ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெறும். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், எம்.ஆா். காந்தி எம்.எல்.ஏ. ஆகியோா் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைக்கின்றனா். இரவு 7 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருளல், 9 மணிக்கு சப்தாவா்ணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிறைவு நாளான ஏப். 16 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனியும், முத்து குடையுடன் யானை பவனி, ஆறாட்டு பூஜை, மெல்லிசை, இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...