புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை (ஏப்.30) மின்விநியோகம் இருக்காது.
முன்சிறை துணை மின் நிலையத்திற்குள்பட்ட புதுக்கடை, ஆழாங்குளம், மாடன் கோயில், கை சூண்டி, வெள்ளையம்பலம், வேங்கோடு, வடக்கு வேங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.