தோ்தல் அலுவலா்களுக்கு2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி தோ்தலின்போது, வாக்குப் பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி தோ்தலின்போது, வாக்குப் பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த ஆட்சியா் மா. அரவிந்த் கூறியது:
நாகா்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் இம்மாதம் 19 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தோ்தல் பணி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு அந்தந்த பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தோ்தல்களில் பணியாற்றவுள்ள ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...