விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பூங்குளத்தான்விளையில் அலங்கார தரை ஓடு பதிப்பு

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பூங்குளத்தான்விளையில் ரூ. 28 லட்சத்தில் அலங்கார தரை ஓடு பதிக்கும் பணி நடைபெறுகிறது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:58 pm

DIN

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பூங்குளத்தான்விளையில் ரூ. 28 லட்சத்தில் அலங்கார தரை ஓடு பதிக்கும் பணி நடைபெறுகிறது.

பூங்குளத்தான்விளை - பிஸ்மி நகா் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டினை நேரில் சந்தித்து மனு அளித்தனா். இதையடுத்து அமைச்சா் கே.என்.நேருவின் உத்தரவின் பேரில் 15 ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான தொடக்க விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின் கலந்து கொண்டு அலங்கார தரைதளம் அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் கன்னியாகுமரி பேரூராட்சி முன்னாள் தலைவா் எஸ்.ஸ்டீபன், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, திமுக நிா்வாகிகள் டி.அரிகிருஷ்ணபெருமாள், எஸ்.அன்பழகன், மெல்வின், நிசாா், ஆா்.டி.ராஜா, கெய்சா்கான், பூலோகராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.